புத்ராஜெயா: ஓய்வூதியம் பெறாத ஆயுதப்படை வீரர்களுக்கும் RM350 சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகிறார்.
இந்த உதவியானது 2021 பட்ஜெட்டில் இருந்து “caring government” நடைமுறைக்கு இணங்குவதாக அவர் கூறினார். இந்த குழுவில் RM300 உதவி பெற்ற சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களையும் உள்ளடக்கியது.
படைவீரர் விவகாரத் துறை சுமார் 300,000 ஆயுதப் படை வீரர்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 85,000 பேர் ஓய்வூதியம் பெறாதவர்கள் மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதியின்படி துறையில் பதிவு செய்தவர்கள்.
இன்னும் பதிவு செய்யாத இந்த பிரிவில் உள்ள வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஜனவரி மாதத்திற்குள் அவர்களுக்கு உதவிகள் கிடைக்க இது அவசியம் என்று திங்கள்கிழமை (நவம்பர் 1) இஸ்மாய் சப்ரி கூறினார்.
2022 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ஒரு மில்லியன் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒருமுறை சிறப்பு உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.