தமிழ்ப்பள்ளியில் பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த 20 பிள்ளைகளின் குடும்பங்களுக்கு ஆர்எச்பி வங்கி மனத்தைத் தொடும் 2021 நிகழ்ச்சியின் வழி தலா 300 ரிங்கிட் வழங்கியது. கொரோனா தொற்றுக் காலத்தில் இந்த உதவி சாலச் சிறந்தது.
தக்க தருணத்தில் இந்த உதவி நிதியை வழங்கிய ஆர்.எச்.பி. வங்கிக்கு விவேகானந்தா ஆசிரமும் தம்புசாமிபிள்ளை தமிழ்ப்பள்ளி நிர்வாகமும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் மூ. கருணாமூர்த்தி இந்த உதவிநிதி கிடைப்பதற்குப் பெரும் பங்காற்றிய விவேகானந்தா ஆசிரமத்திற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.