தீபத்திருநாளின் ஒரு சிறப்பு அம்சமாக இருப்பது கோலம் என்பதனை நாம் அறிவோம். அந்த வகையில் இவ்வாண்டு Tuaran மருத்துவமனையில் “கோலம்” உருவாக்கும் பொறுப்பு நூரியா அப்துல் ரஹீமுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டத்தோ டாக்டர் ஜி. மோகன் கூறுகையில், நூரியா அல்லது ஃபிஃபி என்று அன்புடன் அழைக்கப்படும் தாதி “கோலம்” அலங்கார துறைகளுக்கிடையேயான போட்டியில் நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் என்றார்.
“அவருக்கு “கோலம்” போடுவது எப்படி என்று யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. இணையத்தில் இருந்து தானே கற்றுக்கொண்டார். இப்போது, மற்றவர்களுக்கு அழகாக “கோலம்” செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார். இந்த ஆண்டு ஃபிஃபியும் மற்றவர்களும் மருத்துவமனை லாபியை அலங்கரிக்க கடந்த வாரம் ஈடுபட்டனர். டாக்டர் மோகன் கூறுகையில், தீபாவளியின் போது நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்தியப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பாரம்பரியமான “கோலம்” போடுகிறார்கள்.
2009-இல், நாங்கள் எப்போதும் தீபாவளி மற்றும் ஹரிராயா கொண்டாட்டங்களை அப்போதைய வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த முதலமைச்சருடன் (டத்தோஸ்ரீ ஹாஜி நூர்) கொண்டாடினோம். அன்றிலிருந்து தீபாவளி மற்றும் பிற முக்கிய பண்டிகைகள் மருத்துவமனையின் மரபுகளில் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
அத்தகைய பாரம்பரியம் ஊழியர்களிடையே ஒற்றுமையையும் புரிதலையும் கொண்டு வரும். இது நாட்டின் ‘மலேசிய குடும்பக் கருத்துக்கு ஏற்ப உள்ளது. இந்த ஆண்டு, மருத்துவமனை ஊழியர்களிடையே சிறந்த இந்திய ஆடை, ரொட்டி செனாய், தே தாரே உள்ளிட்ட போட்டிகளை ஏற்பாடு செய்யும் என்று டாக்டர் மோகன் கூறினார்.



















