விண்வெளியில் நடந்து சாதனை படைத்த சீன நாட்டுப்பெண்

விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட மூன்று பேர் ‘ஷென்ஷோ – 13’ விண்கலத்தில் கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டனர். ‘இவர்கள் மூவரும் டியாங்காங் ஆய்வு நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்வர்’ என, சீனா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று டியாங்காங் ஆய்வு நிலையத்தில் இருந்து, வங் யபிங், ஜாய் ஆகியோர் வெளியேறி விண்ணில் நடந்து, வெளிப்புற கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு, டியாங்காங்கில் இருந்த மூன்றாவது விண்வெளி வீரரான யி குவாங்பூ உதவி செய்தார். ஆறு மணி நேரம் விண்வெளியில் நடந்து பல்வேறு பணிகளை செய்து முடித்த பின், வங் யபிங், ஜாய் ஆகியோர் டியாங்காங்கிற்கு திரும்பினர்.

இதன் வாயிலாக, விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை, வங் யபிங் பெற்றுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான வங் யபிங், விமானப் படையில் பணியாற்றி, விண்வெளி துறைக்கு வந்தவர். ரஷ்யாவின் வாலன்டினா தெரஷ்கோவாவிற்கு பின், விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும், வங் யபிங்கிற்கு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here