சுகாதார அமைச்சகம் இன்று 5,755 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,602,835 ஆக உள்ளது.
தேசிய அளவில், கடந்த ஏழு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 3.2% குறைந்துள்ளது.
இருப்பினும், சில மாநிலங்களில், குறிப்பாக பினாங்கு (+37.6%), பகாங் (+24.2%) மற்றும் கெலாண்டன் (+10.4%) ஆகிய இடங்களில் இதே காலகட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது.
நவம்பர் 11 முதல் பினாங்கில் கோவிட்-19 நோயாளிகளுக்கான சராசரி தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், கோவிட்-19 நோயாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட படுக்கைகளுக்கான பயன்பாடு இன்னும் 32 % காலியாக உள்ளது.
இதற்கு நேர்மாறாக, கோவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கை பயன்பாடு தெரெங்கானு மற்றும் கிளந்தானில் 90 % எட்டி உள்ளது.
நேற்றைய R-naught எழுதும் நேரத்தில் சுகாதார அமைச்சினால் கிடைக்கப்பெறவில்லை. மாநிலங்கள் அல்லது பிரதேசங்களின்படி புதிய தொற்றுகளின் விவரம் நள்ளிரவுக்குப் பிறகுதான் கிடைக்கும். இவை நேற்றைய (நவம்பர் 23) புள்ளிவிவரங்கள்:
சிலாங்கூர் (1,397), கிளந்தான் (640), ஜோகூர், (569), சபா (526), கெடா (471), கோலாலம்பூர் (419), பகாங் (278), பினாங்கு (262), சரவாக் (239), பேராக் (226), தெரெங்கானு (207), நெகிரி செம்பிலான் (139), மலாக்கா (112), புத்ராஜெயா (71), பெர்லிஸ் (31), லாபுவான் (7).