கோலாலம்பூர் ஜாலான் டுத்தாவில் வியாழக்கிழமை (டிச. 2) இரவு நடந்த விபத்தில் மூத்த குடிமகன் ஒருவர் உயிரிழந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஷரிபுடின் முகமது சலே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) ஒரு அறிக்கையில், இரவு 8.10 மணியளவில் பாதிக்கப்பட்ட 73 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காரின் பின்புறத்தில் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
அந்த நேரத்தில் அந்த நபர் டியூக் நெடுஞ்சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.