தெற்கு பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸின் டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வால்கானாலஜி மற்றும் சீஸ்மோலாஜி தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 7.48 மணியளவில் இந்தச் சம்பவம் சாரங்கனி தீவில் இருந்து தென்கிழக்கே 285 கிமீ தொலைவில் 156 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் நிகழ்ந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிறுவனம் கணித்துள்ளது. தாவோ ஆக்சிடென்டல் அருகே உள்ள கேட்டீல் நகரத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here