புத்ராஜெயா: சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவர்கள் காவலில் இறந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ராயல் மலேசியா காவல்துறை (PDRM) குற்றப் புலனாய்வுப் பிரிவை அமைத்துள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களை தடுப்புக் காவலுக்கு அனுப்புவதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்ய தனியார் கிளினிக்குகளை நியமிக்க நிதி அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.