நாட்டின் மக்கள் தொகையில் 78.1 விழுக்காட்டினர் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 11 :

நேற்று இரவு 11.59 மணி நிலவரப்படி, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25,493,520 நபர்கள் அல்லது 78.1 விழுக்காட்டினர் கோவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் COVIDNOW போர்ட்டலின் அடிப்படையில், 25,918,025 நபர்கள் அல்லது 79.4 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் 7,317,045 நபர்கள் அல்லது 22.4 விழுக்காட்டினர் இதுவரை கோவிட்-19க்கு எதிராக தடுப்பூசியை செலுத்தவில்லை .

பெரியவர்களை பொறுத்தவரை, 22,758,472 பேர் அல்லது 97.2 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 23,078,880 பேர் அல்லது 98.6 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.

மேலும் பதின்ம வயதினரில், 2,735,048பேர் அல்லது 86.9 விழுக்காட்டினர் தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,839,145 பேர் அல்லது 90.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்.

நேற்று விநியோகிக்கப்பட்ட 123,868 தடுப்பூசிகளில் 3,930 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 6,613 தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாகவும் மற்றும் 113,325 தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்தப்பட்டது. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளின் எண்ணிக்கையை54,748,772 ஆகக் கொண்டு வந்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here