வெள்ளப் பேரிடர் காரணம் ஜனவரியில் நடைபெறவிருந்த அம்னோ ஆண்டுக்கூட்டம் ஒத்தி வைப்பு

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவிருந்த அம்னோ பொதுச் சபை 2021, தற்போதைய வெள்ளச் சூழ்நிலை காரணமாக மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் கூறுகிறார். இதனை ஒத்திவைப்பதற்கு தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொது செயலாளர்  தெரிவித்துள்ளார்.

ஜனவரி 12 முதல் 15, 2022 வரை நடைபெறவிருந்த அம்னோ பொதுச் சபை, வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படும். அது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் சனிக்கிழமை (டிச. 25) அறிக்கையில் தெரிவித்தார். பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அம்னோ அடிமட்ட தலைவர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும் அகமட் விளக்கினார்.

வெள்ளம் காரணமாக கோத்தா ராஜா, கிள்ளான் போன்ற சில பிரிவுகளால் இன்னும் பிரிவு கூட்டங்களை நடத்த முடியவில்லை  என்று அவர் மேலும் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அம்னோ பொதுச் சபை பொதுவாக 191 பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்ரி பிரிவுகளைச் சேர்ந்த 6,000 அடிமட்டத் தலைவர்களையும், நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் உள்ளடக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here