கோலாலம்பூர், டிசம்பர் 28 :
கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் முதலில் புகாரளித்த எட்டு தென்னாப்பிரிக்க நாடுகளின் பயணத் தடையை மலேசியா நீக்கியுள்ளது.
இந்த பயணத்தடை உலகம் முழுவதும் ஓமிக்ரான் மாறுபாட்டின் அதிக பரவலைக் காரணமாக கொண்டே இந்த 8 தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்தது என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் மற்றும் மலாவி உள்ளிட்ட எட்டு நாடுகள், மற்றும் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மலேசியாவிற்கு வந்தவுடன் கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுத்தப்படுவர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.