தீயணைப்பு இயந்திரம் கவிழ்ந்ததில், உதவி ஓட்டுநருக்கு காயம்!

மலாக்கா, ஜனவரி 9 :

இன்று காலை இங்குள்ள ஜாலான் லிபாட் காஜாங்கில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பில், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் உதவி ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

காலை 11.55 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நீர் தாங்கி இயந்திரத்தின் உதவி ஓட்டுநருக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டது, அதிஸ்டவசமாக ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

அதிகாரிகள் உட்பட ஆறு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், காலை 11.56 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் ரஹிசாம் ருசாலி கூறினார்.

“சம்பவத்தின் போது ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திட்டமிடப்பட்ட இயந்திர ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

“இயந்திரத்தின் ஓட்டுநருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை மற்றும் அவர் நிலையான நிலையில் இருந்தார், ஆனால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர் மேலதிக சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

“உதவி ஓட்டுநருக்கு தலையில் சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டது, அவர் இன்னும் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்,” என்றும் அவர் கூறினார்.

அவர் கூறுகையில், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here