கோலாலம்பூர், ஜனவரி 13 :
ஜோகூரில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, நேற்று பிற்பகல் 1,044 பேராக இருந்து, இன்று காலை 8 மணியளவில் 206 குடும்பங்களைச் சேர்ந்த 705 பேராக குறைந்துள்ளது.
மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வித்யானந்தன் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 17 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மூவாரில் 367 பேரும் அதைத் தொடர்ந்து செகாமாட்டில் 326 பேரும் மற்றும் தங்காக்கில் 12 பேரும் தங்கியுள்ளனர்.
“வெள்ளத்தால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட, மாநிலம் முழுவதும் பிரகாசமான வானிலை பதிவாகியுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கோத்தா திங்கியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள ஜாலான் ஃபெல்டா புக்கிட் அபிங் சாலை அனைத்துப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது என்றார்.