2 வாரங்களுக்குப் பிறகு கோவிட் தொற்று அதிகரித்து இன்று 3,684 பேர் பாதிப்பு

சுகாதார அமைச்சகம் இன்று 3,684 புதிய கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்துள்ளது.  ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,798,917 ஆக உள்ளது. டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு, 14 நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகமாகும். தேசிய அளவில், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏழு நாட்களில் 1.1% அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் நள்ளிரவுக்குப் பிறகு மாநிலங்கள் வாரியாக புதிய தொற்றுகளின் இன்றைய விவரத்தை அதன் CovidNow போர்ட்டலில் மட்டுமே வெளியிடும். 3,198 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நேற்றைய (ஜனவரி 12) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (935), ஜோகூர் (417), கோலாலம்பூர் (319), சபா (280), பகாங் (210), கிளந்தான் (197), கெடா (183), பினாங்கு (179), பேராக் (141), நெகிரி செம்பிலான் (106), மலாக்கா (76), தெரெங்கானு (76), புத்ராஜெயா (34), சரவாக் (23), பெர்லிஸ் (13), லாபுவான் (9).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here