வெளிநாட்டு பணிப்பெண்ணிடம் கொள்ளையடித்த சில மணி நேரங்களிலேயே உள்ளூர் ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா, செக்‌ஷன் பிரிவு 4 இல் கொள்ளை முயற்சியில் ஒருவர் காயமடைந்த சில மணி நேரங்களிலேயே ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 16) ஒரு அறிக்கையில், பெட்டாலிங் ஜெயா OCPD உதவி ஆணையர் முகமட் ஃபக்ருதின் அப்துல் ஹமிட், சனிக்கிழமை (ஜனவரி 15) அங்கு கொள்ளை முயற்சியின் போது 50 வயது பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண், சந்தேக நபரால் இழுத்துச் செல்லப்பட்டதால் அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீஸ் குழு 32 வயதான சந்தேக நபரை அதே நாள் இரவு 10.30 மணியளவில் தாமான் ஸ்ரீ மஞ்சாவில்  உள்ள கார் நிறுத்துமிடத்தில் கைது செய்தது.

அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டு தப்பிக்க முயன்றார். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. சோதனையில் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டது. மேலும் அவர் 10 கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஐந்து போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் பதிவுகள் இருப்பதைக் காட்டியது என்று அவர் கூறினார்.

ஏசிபி முகமட் ஃபக்ருதீன் கூறுகையில், சந்தேக நபர் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த நபர், பாதிக்கப்பட்டவரை நோக்கி கத்தியை காட்டியதாகவும், ஆனால் அவரால்  எந்த பொருட்களையும் கைப்பற்ற முடியவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.

போதைப்பொருள் பரிசோதனையின் போது சந்தேக நபர் THC க்கு நேர்மறை சோதனை செய்ததாக அவர் கூறினார். பின்னர் அந்த நபர் ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவரை கைது செய்வதன் மூலம் மாவட்டத்தில் பல திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here