அசாம் பாக்கியின் பங்குகளின் உரிமை தொடர்பான சர்ச்சையை விவாதிக்க மக்களவையில் இரண்டு பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டன.
நிலையியற் கட்டளைகளின் கீழ் கூறப்பட்டுள்ளபடி இன்றைய விசேஷ அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு இருப்பதாக மக்களவையில் சபாநாயகர் அசார் ஹருன் தெரிவித்தார்.
எனவே, இவ்விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமா என்பதை முடிவு செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அவர், இது இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸிலும் நடைமுறையில் உள்ளது என்றும் கூறினார்.
இன்று வரை, பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பிரதமரிடமிருந்து எனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, இன்றைய நிகழ்ச்சி நிரலில் பிரேரணைகள் இடம்பெறாது என்று நான் கருத வேண்டியுள்ளது.
எனவே, இன்றைய நிகழ்ச்சி நிரல்களின்படி நாம் இன்றைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அசார் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.







