காதலியின் ஆறு வயது மகனைக் கொலை செய்தவருக்கு, உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

கங்கார், ஜனவரி 21 :

தனது காதலியின் ஆறு வயது மகனைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியான வேலையில்லாத நபருக்கு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

நீதித்துறை ஆணையர் டாக்டர் அரிக் சனுசி யோப் ஜொஹாரி வழங்கிய தீர்ப்பில், 30 வயதான நோரைசுவான் ஹமாலி மீதான குற்றம் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏப்ரல் 18, 2018 அன்று பிற்பகல் 3.45 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.10 மணி வரை, இங்கு அருகிலுள்ள கம்போங் ஜெஜாவியில் உள்ள ஜாலான் ஆராவ், லோரோங் செம்பகாவில் உள்ள ஒரு வீட்டில் முஹமட் ரயான் ஹிதாயத் ஹைரில் கானைக் கொலை செய்ததாக நோரைசுவான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது தண்டனையின் போது கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது.

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் முகமட் இஷாம் அலி நடத்தினார், நோரைசுவான் சார்பில் வழக்கறிஞர் ரஃபிடி முகமட்டும் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here