சுகாதார அமைச்சகம் அதன் GitHub தரவுத்தளத்தின்படி, நேற்று 5 புதிய கோவிட்-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதில் மூன்று பேர் சேர்க்கப்பட்டவர்கள் (BID) என வகைப்படுத்தப்பட்டனர். இறப்பு எண்ணிக்கை 31,957 ஆக உள்ளது
சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு, மலாக்கா மற்றும் பகாங் ஆகிய இடங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.
ஜோகூர், பேராக், கெடா, தெரெங்கானு, நெகிரி செம்பிலான், சபா, சரவாக், பெர்லிஸ், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் எந்த உயிரிழப்புகளையும் பதிவு செய்யவில்லை.
நள்ளிரவு நிலவரப்படி, 51,397 செயலில் உள்ள தொற்றுகள் உள்ளன. இதில் 119 தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ICU) உள்ளனர். அவர்களில் 69 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
3,767 குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பதிவான மொத்த கோவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 2,861,069 ஆக உள்ளது.









