சீனப் புத்தாண்டு சிறப்பு நடவடிக்கை: ஐந்து நாட்களில் 390 சம்மன்கள் விதித்த திரெங்கானு சாலைப் போக்குவரத்துத் துறை

கோல திரங்கானு, ஜனவரி 31 :

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) முதல் நேற்று இரவு 10 மணி வரை நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், திரெங்கானு சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) மொத்தம் 390 சம்மன்கள் (summonses) விதித்தது.

திரெங்கானு சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சுல்கர்னைன் யாசின் கூறுகையில், இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 2,301 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை வண்ணக் கண்ணாடியைப் பயன்படுத்தியதற்காக 87 சம்மன்கள் விதிக்கப்படடன, காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (98 வழக்குகள்), செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லை (90 வழக்குகள்) மற்றும் தொழில் உரிமம் இல்லை (33 வழக்குகள்) போன்றவைகளும் அடங்கும்.

நேற்றிரவு இந்த நடவடிக்கையின் போது , மூன்று இடங்களில் சாலைத் தடைகள் அமைக்கப்பட்டன, அதாவது இங்குள்ள சுல்தான் மஹ்மூட் பாலம், கெமாமன் மற்றும் பெசூட் பகுதிகளில் இச்சாலைத் தடைகள் அமைக்கப்பட்டு, 117 சம்மன்கள் வழங்கப்பட்டதுடன் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

மேலும், இந்த நடவடிக்கையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (AADK) நடத்திய சோதனையைத் தொடர்ந்து 3 நபர்கள் போதைப்பொருளுக்கு நேர்மறை சோதனை செய்ததாக அவர் கூறினார்.

80 JPJ பணியாளர்கள், ரோயல் மலேசியா போலீஸ் (13), தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (27) மற்றும் சுற்றுச்சூழல் துறை (7) ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவடையும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான இந்த ஆண்டின் சிறப்பு நடவடிக்கை, மாநிலத்தில் 22 விபத்துக்குள்ளாகும் என நம்பப்படும் இடங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here