காதலியை கொன்று விட்டு தன்னை தானே மாய்த்து கொண்ட ஆடவர் – மலாக்காவில் சம்பவம்

மலாக்கா பத்து பெரெண்டாம் பகுதியில் உள்ள தாமான் மெர்டேகாவில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில் ஒரு நபர் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக நம்பப்படுகிறது.

மாலை 4 மணியளவில் நடந்த சம்பவத்தில் 22 வயது பெண்ணின் ரத்தம் தோய்ந்த உடல் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

பெண்ணின் MySejahterta விண்ணப்பத்தை சரிபார்த்ததில் அவர் கோவிட்-19 தொற்று என்று கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது துணையுடன் ஏற்பட்ட மோதலின் போது உதவிக்கு அழைத்ததாக அந்தப் பெண்ணின் நண்பரிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஒரு போலீஸ் குழு முன் கதவு பூட்டப்பட்டதைக் கண்டது. அது பின்னர் வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டது என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் தன்னைத்தானே குத்திக்கொள்வதற்கு முன்பு தனது காதலியைக் குத்திக் கொன்றார் என்று கண்டறியப்பட்டது என்று கிறிஸ்டோபர் கூறினார்.

மேலும், அந்த நபர் தனது உடலுக்கு அருகில் வாயில் நுரை தள்ளியதால் மண்ணெண்ணையை உட்கொள்ள முயன்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here