பெந்தோங்,
பெண்கள், குடும்பங்களை மேம்படுத்தும் வேலை வாய்ப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதை முன்னிட்டு சேமோமோய் பெல்டா மக்க ளுக்கும் அதன் சுற்றுப்புற மக்களுக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக் கின்றன.
சேமோமோய் பெல்டா கல்வி சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஒரு வேலை வாய்ப்பு கண்காட்சியில் 18 முதலாளிகள் பங்கேற்றனர். இதில் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.
அதோடு மின்விளையாட்டு, சுகாதாரப் பரிசோதனை, குடும்ப மாதர்களுக்கான உதவித் திட்டப் பதிவு, பயிற்சி செயல்முறை போன்ற நிகழ்வுகளும் இதில் இடம் பெற்றன.
பெந்தோங் சேமோமோய் பெல்டா மக்களின் சமூகப் பொருளாதாரத்திற்கு இத்திட்டம் உதவும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
மனிதவள அமைச்சர் வி. சிவகுமாரும் மலேசிய மகளிர் குடும்ப நலத் துறை மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஷரிஸாட் அப்துல் ஜாலிலும் கலந்துகொண்டனர்.