தடுப்பூசி போடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்ததாக கூறப்படும் பதின்ம வயதினரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக அமைச்சகம் காத்திருப்பதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
“மற்ற விசாரணைகள்” பற்றிய அறிக்கைக்காக அமைச்சகம் காத்திருப்பதாகவும் நூர் ஹிஷாம் கூறினார். ஆனால் இந்த விஷயம் குறித்து விரிவாகக் கூறவில்லை. இந்த நேரத்தில் மாநில சுகாதாரத் துறை, விசாரணை செய்து வரும் மருத்துவர்கள் மற்றும் தடயவியல் குழுவுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.
நூர் ஹிஷாம் 13 வயது சிறுவனின் குடும்பத்திற்கு அமைச்சரின் இரங்கலையும் தெரிவித்தார். சிறுவனின் மரணம் குறித்து அமைச்சகம் அறிக்கையை வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் டுவீட் செய்ததற்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.