அலோர் ஸ்டார், பிப்ரவரி 24 :
இங்குள்ள லோரோங் பாவ், டெர்காவில் ஒரு வீட்டின் கூரையில் மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்ட 38 வயதான அந்த நபர் வீட்டின் கூரையில் பராமரிப்பு வேலை செய்து கொண்டிருந்தார்.
அலோர் ஸ்டார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) தலைமை துணை கண்காணிப்பாளர் II அஹ்மட் நௌஃபல் அப்துல்லா இதுபற்றிக் கூறுகையில், சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு காலை 11.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவரை ஸ்ட்ரெச்சர் மூலம் கீழே கொண்டு வந்தோம். மருத்துவ ஊழியர்களின் பரிசோதனையின் பின்னர், பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
“பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு (HSB) கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பில் கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் அஹ்மட் ஷுக்ரி மாட் அகிரைத் தொடர்பு கொண்டபோது, சம்பவம் குறித்த அறிக்கையைப் தாம் பெற்றதாக உறுதிசெய்ததுடன், இந்த வழக்கை திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.