அலோர் ஸ்டாரில் உள்ள குனுங் கெரியாங்கில் நேற்று மலையேற்றத்தின் போது வழி தவறிய 3 பேர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்றிரவு 11.33 மணியளவில் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மண்டலம் 1 தலைவர் வான் முகமட் ஹமிசி வான் முகமட் சின் தெரிவித்தார்.
மலையின் உச்சியில் உள்ள ஒரு குகைக்குள் பலவீனமான நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.
அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேல் நடவடிக்கைக்காக அவர்களை மலையடிவாரத்திற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 6 மணிக்கு மலையில் ஏற தொடங்கிய மூவரும் மூவரும் தங்கள் நண்பர்களை அடிவாரத்தில் சந்திக்கத் தவறியதாக பெர்னாமா முன்பு தெரிவித்திருந்தது.