கோவிட்-19 rapid test kits (RTK) மூலம் சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டும் சமூக ஊடகங்களில் வரும் பல்வேறு வீடியோக்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஆஸ்மி கசாலி, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அதிகாரிகளுக்கோ அல்லது சுகாதார அமைச்சகத்திற்கோ புகாரளிக்க வேண்டும். எனவே வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் பயன்படுத்தப்பட்ட சோதனை கருவியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விசாரணை நடத்தப்படும் என்றார். ஒவ்வொரு RTK-ஆன்டிஜென் சுய-பரிசோதனை கருவிகளும் மருத்துவ சாதன ஆணையத்தின் (MDA) அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்படாத கருவிகளை விற்பது குற்றமாகும்.
போலி தடுப்பூசி சான்றிதழ்களின் விற்பனையிலும் இது போலவே இருந்தது.மேலும் இது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் சுராவ் ஆலில் இஸ்லாமிய சம்ய நல அமைப்பு மற்றும் பாகன் செராய் மலாய் சமூகத்தின் 60 வது ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான கோவிட்-19 தேசிய நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) குறித்து விளக்கமளிக்க பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரங்கள்) டத்தோ இட்ரிஸ் அகமதுவுடன் இந்த செவ்வாய்கிழமை சிறப்பு சந்திப்பை நடத்த உள்ளதாகவும் நூர் ஆஸ்மி கூறினார். தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் சந்தேகம் உள்ள சமய குழுக்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். தடுப்பூசி ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க டவுன்ஹால் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.