கோலாலம்பூர்: இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையில் இருந்து மலேசியர்களை திருப்பி கொண்டு பணியின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ) அவசர பிரிவில் புதன்கிழமை (மே 12) அதிகாலை 1 மணிக்கு வந்து சேர்ந்தது. வெளியுறவு அமைச்சகத்தின் (விஸ்மா புத்ரா) அறிக்கையின்படி, சிறப்பு மலிண்டோ ஏர் விமானம் 132 பேருடன் தரையிறங்கியது.
இந்த எண்ணிக்கையில், 117 பேர் மலேசியர்கள் மற்றும் ஆறு பேர் அரசு சார்புடையவர்கள், மலேசியாவில் ஒரு நிரந்தர வசிப்பாளர் மற்றும் எட்டு புருணை நாட்டவர்கள் ஆவர்.
மலேசியாவிற்கும் புருனே இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில், அதே பணியின் கீழ் புருனியர்களை மீண்டும் கொண்டுவருவதற்கு மலேசிய அரசாங்கமும் உதவி கரம் நீட்டியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் உள்ள அனைத்து பயணிகள், பணியாளர்கள் மற்றும் முன்னணி பணியாளர்கள் சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) நிர்ணயித்த கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) உட்படுத்தப்படுகிறார்கள்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா), எம்ஓஎச், குடிநுழைவுத் துறை, புதுடெல்லி உள்ள மலேசிய உயர் மட்ட அதிகாரிகள், மும்பையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் மற்றும் பிற தொடர்புடைய ஏஜென்சிகள் ஆகியவற்றின் நெருக்கமான ஒத்துழைப்புதான் இந்த பயணத்தின் வெற்றிக்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை சாத்தியமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் வெளியுறவு அமைச்சகம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நல்வாழ்வையும் நலனையும் உறுதி செய்வதில் அமைச்சகம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். – பெர்னாமா