ஜோகூர் பாரு பிரச்சாரக் காலம் முழுவதும் அவதூறு தொடர்பான ஏழு புகார்களை காவல்துறை பெற்றுள்ளது. ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் கூறுகையில், பொது அமைதியின்மைக்கு வழிவகுக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் காவல்துறை இந்த வழக்குகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்றும், பிரச்சார காலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று அவர் இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நேரடியாகவும் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளை மறுநாள் சனிக்கிழமை (மார்ச் 12) என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.