எஸ்ஓபியை மீறியதாக மூன்று பொழுதுபோக்கு மையங்களின் பார்வையாளர்கள் மற்றும் வளாக உரிமையார்கள் என மொத்தம் 75 பேருக்கு அபராதம்!

கோலாலம்பூர், மார்ச் 15 :

தலைநகரைச் சுற்றியுள்ள மூன்று பொழுதுபோக்கு மையங்களில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில், எஸ்ஓபியை மீறியதாக மொத்தம் 72 பார்வையாளர்கள் மற்றும் மூன்று வளாக உரிமையாளர்கள் மீது மொத்தமாக RM75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் தலைவர் டத்தோ அஸ்மான் அயோப் கூறுகையில், தேசிய மறுவாழ்வுத் திட்டம் 2021 இன் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறி அம்மூன்று பொழுதுபோக்கு மையங்கள் செயல்படுவது சோதனையில் கண்டறியப்பட்டது.

வளாகத்தின் மூன்று உரிமையாளர்கள் மற்றும் முதல் வளாகத்தில் 18 பார்வையாளர்கள், இரண்டாவது வளாகத்தில் 20 பார்வையாளர்கள் மற்றும் மூன்றாவது வளாகத்தில் 34 பார்வையாளர்கள் என மொத்தமாக 75 பேரிடமிருந்து அபராதமாக தலா RM1,000 கட்டணம் வசூலிக்கப்பட்டது .

“நேற்று இரவு நடந்த சோதனையில் வழங்கப்பட்ட மொத்த அபராதம் RM75,000 ஆகும்.

“தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் (APPPB) VAT 4 2021 இன் விதிமுறை 17 இன் படி கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது, இது தற்போது நடைமுறையில் உள்ள பப்கள் மற்றும் இரவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு எதிரானது ” என்று, இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here