மலாக்கா, மார்ச் 15 :
முன்னாள் ரும்பியா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நோர்பிபா அப்துல் இன்று காலமானார்.
மலாக்கா பெண்கள் விவகாரங்கள் மற்றும் சுகாதாரக் குழுவின் முன்னாள் தலைவருமான டத்தோ நோர்பிபா, தனது 68 ஆவது வயதில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு, புத்ராஜெயாவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் (IKN) காலமானார்.
அசாஹான் சட்டமன்ற உறுப்பினர் ஃபைருல் நிஜாம் ரோஸ்லானை தொடர்பு கொண்டபோது, அவர் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
“இறந்தவர் முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் அங்கு சிகிச்சை பெற்றபோது அவர் கோவிட் -19 தொற்றுக்கும் உள்ளாகினார்,” என்று அவர் கூறினார்.
12வது பொதுத் தேர்தல் (GE) போட்டியிட்டு மூன்று முறை ரும்பியா சட்டமன்ற உறுப்பினராக நோர்பிபா இருந்தார்.
அரசியலில் தனது முழுமையான ஈடுபாட்டைக் கொண்ட மறைந்த நோர்பிபா, அம்னோ – அலோர் காஜா பெண்கள் பிரிவு தலைவராகவும், அம்னோவின் மலாக்கா மாநில பெண்கள் தகவல் தொடர்பு தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.