இஸ்கந்தர் புத்திரி, மார்ச் 16 :
புதிதாக நியமிக்கப்பட்ட ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி, இன்று கோத்தா இஸ்கந்தரில் உள்ள பங்குனன் டத்தோ ஜாபர் முஹமட்டில் தனது பணியை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
ஜோகூரின் 19 ஆவது மந்திரி பெசாரான ஓன் ஹபீஸ், இன்று காலை 10.05 மணிக்கு மாநில நிர்வாக கட்டிட வளாகத்திற்கு வாகனத்தில் வந்தார், அவரை மாநில செயலாளர் டத்தோ ஆஸ்மி ரோஹானி வரவேற்றார்.
ஓன் ஹபீஸ், முழுக்க முழுக்க கருப்பு நிற உடை அணிந்து, நிலை 4ல் உள்ள தனது அலுவலகத்திற்குள் நுழைந்து, தனது முதல் வேலை நாளைக் குறிக்கும் வகையில் ஒரு கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு முன், அங்கு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றார்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில், போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், பாரிசான் நேஷனல் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.