பண்டார் துன் ரசாக் புத்தகக் கடையில் பெண் கொலை; சந்தேக நபரின் தடுப்புக்காவல் நீட்டிப்பு

கோலாலம்பூர்: பண்டார் துன் ரசாக்கில் ஒரு பள்ளியின்  புத்தகக் கடையில் 25 வயதுப் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபரின் காவல் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று செராஸ் OCPD உதவி ஆணையர் முஹம்மது இட்ஸாம் ஜாபர் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் ஒரு சனிக்கிழமையன்று புத்தக சப்ளையருக்காகக் காத்திருந்ததால் கடையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

மார்ச் 12 அன்று, பண்டார் துன் ரசாக்கில் உள்ள ஒரு பள்ளியில் அமைந்துள்ள புத்தகக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 25 வயதான பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன்பின்னர் 30 வயதுடைய பாதுகாவலரை போலீசார் கைதுசெய்தனர். அவர் முக்கிய சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். திங்கள்கிழமை (மார்ச் 21) இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செராஸ் காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஏசிபி முஹம்மது இட்ஸாம் விசாரணை சுமார் 90% நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here