கோலாலம்பூர், மார்ச் 21 :
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆசியான் நாடான வியட்நாமிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று வியட்நாம் சென்றடைந்த பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அங்குள்ள அதிபர் மாளிகையில் உத்தியோகபூர்வ வரவேற்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வியட்நாமிய பிரதிநிதி பாம்மின் சின்ஹ் பிரதமரை வரவேற்றார்.
இரு நாடுகளின் தேசிய கீதங்களான மலேசியாவின் “நெகாராகூ” மற்றும் வியட்நாமின் “Tien Quan Ca” ஆகியவை இசைக்கப்பட்டன.
பின்னர் இரு தலைவர்களும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று, அரசு அலுவலக முகப்பில் புகைப்படம் எடுத்தனர்.
அமர்வுக்குப் பிறகு, இரு பிரதமர்களும் ஆவணங்களை பரிமாறிக் கொள்வதற்காக ஒரு சந்திப்பு அறைக்குச் சென்றனர்.
இந்த ஆவணங்கள் சட்ட ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம், இராஜதந்திர பயிற்சி மற்றும் மலேசிய தேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) மற்றும் தொழில்முறை ஒத்துழைப்புக்கான வியட்நாம் செய்தி முகமை ஒப்பந்தம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான கடிதம் (LOI) ஆகும்.
பின்னர், இஸ்மாயில் சப்ரி மற்றும் அவரது பிரதிநிதிகள் அரசாங்க அலுவலகத்தில் சின்ச் வழங்கும் அதிகாரப்பூர்வ மதிய உணவில் கலந்துகொள்வார்கள்.
மேலும் மாலையில், பிரதமர் வியட்நாம் அதிபர் Nguyen Xuan Phuc, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் Nguyen Phu Trong மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் Vuong Dinh Hue ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்த உள்ளார்.
சின்ச்சின் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு பிரதமர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அத்தோடு இஸ்மாயில் சப்ரி செவ்வாய்க்கிழமை காலை மலேசிய ஊடகங்களுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திவிட்டு கோலாலம்பூர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.