உணவகப் பகுதியில் மோதிய கார்: 7 பேர் காயம்

கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள உணவகத்தின் வெளிப்புற உணவகப் பகுதியில் நேற்று  கார் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது ​​காயமடைந்தவர்கள் மூன்று ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என அனைவரும் உள்ளூர்வாசிகள், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இரவு 9.19 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றார்.

இந்த விபத்தில் ஹோண்டா எச்ஆர்வி கார் ஒன்று, பெரோடுவா ஆக்ஸியா மற்றும் ஹெலெக்ஸ் ஆகிய இரண்டு கார்கள் மீது மோதியதன் பின்னர் சறுக்கி உணவகப் பகுதியில் மோதியதாக நம்பப்படுகிறது அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here