ஜப்பானிய தனியார் கல்லூரி மாணவி ஒருவர், ஆப்பிரிக்க ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான போலீஸ் புகாரை அளித்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM2,000 அபராதம் விதித்தது.
மாஜிஸ்திரேட் முஹம்மது இஸ்கந்தர் ஜைனோல் 20 வயதான அகேஹா மாட்சுசாகிக்கு அபராதம் செலுத்தத் தவறினால் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார். ஆனால் மாட்சுசாகி அபராதம் செலுத்தினார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ஶ்ரீ கெம்பாங்கன் காவல் நிலையத்தில் ஒரு போலீஸ்காரரிடம் தவறான போலீஸ் புகாரை பதிவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் பிரிவு 182 இன் கீழ், அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் காவல்துறைக்கு அளித்த எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தில், பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு கார் பின்னால் வந்து தனக்கு அருகில் நின்றதாகக் கூறினார்.
அந்த அறிக்கையில், ஐந்து அல்லது ஆறு ஆப்பிரிக்க ஆண்கள் காரில் இருந்து இறங்கி, தன்னைத் தங்களைப் பின்தொடரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அப்போது ஆண்களில் ஒருவர் தன்னை நோக்கி கத்தியைக் காட்டியதாகவும், அந்த நபர்கள் மாறி மாறி பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் விசாரணைகளின் பின்னர் பெண் தவறான அறிக்கையை வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் கூறியது போல் எந்த ஆதாரமும் கற்பழிப்பு சம்பவமும் இல்லை.