வாசகர்கள் படித்துவிட்டு வைக்கும் புத்தகங்களை, நூலகர்கள் அந்த இயந்திரத்துக்குள் வைத்து உடனடியாக சுத்தம் செய்கின்றனர். கிருமிகள், தூசிகளை அந்த இயந்திரம் சுத்தம் செய்து விடுகிறது.
2018 ஆம் ஆம் ஆண்டிலிருந்து இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து நூலகங்களிலும் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாசகர்கள் புத்தகத்தை எடுக்கும் பொழுதும், படித்துவிட்டு புத்தகத்தை திரும்ப வைக்கும்போழுதும் இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுகிறது. எனினும் இந்த நடைமுறை கட்டாயம் அல்ல என்றும், பார்வையாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்வதை வாசகர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கான புத்தகத்தை இந்த இயந்திரத்துக்குள் வைத்து சுத்தம் செய்யப்படுவதை மக்கள் விரும்புகின்றனர்.