கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 1,092 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் நேற்று 1,092 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 628 தொற்றுகள் வகை 1 மற்றும் 2 லும், 464 தொற்றுகள் வகை 3, 4 மற்றும் 5 லும் உள்ளன.

சிலாங்கூர் 209 புதிய சேர்க்கைகளுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதைத் தொடர்ந்து பேராக் (109) மற்றும் ஜோகூர் (100) உள்ளன. இதற்கிடையில், மொத்தம் 1,282 நோயாளிகளும் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

ஒரு அறிக்கையில் சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கோவிட்-19 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU) அவற்றின் மொத்த கொள்ளளவான 882 படுக்கைகளில் 33% இல் இருப்பதாகக் கூறினார்.

புத்ராஜெயா (100%), கோலாலம்பூர் (67%), ஜோகூர் (55%) மற்றும் சிலாங்கூர் (51%) ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ICU படுக்கைகள் 50% திறனைத் தாண்டியுள்ளன.

மொத்தம் 188 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. அவர்களின் அதிகபட்ச திறனில் 21% வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புத்ராஜெயா (80%), சிலாங்கூர் (73%), கோலாலம்பூர் (61%), தெரெங்கானு (57%), சரவாக் (55%), மலாக்கா (54%), நெகிரி செம்பிலான் (54%), மற்றும் பேராக் (53%) ஆகிய இடங்களில் சாதாரண கோவிட்-19 படுக்கைகளின் பயன்பாடு 50% திறனைத் தாண்டியுள்ளது.

அரசாங்க மருத்துவமனைகளில் கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளின் மொத்தத் திறனைப் பொறுத்தவரை, முக்கியமான படுக்கைகள் 51% ஆகவும், 57% ஐசியூக்கள் பயன்பாட்டில் உள்ளன.

நேற்று ஒரு புதிய கிளஸ்டர் (கொத்து) மட்டுமே பதிவாகியுள்ளது. கோவிட்-19 தொற்று விகிதம் (R0) 0.92 ஆக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here