கார் மரத்தில் மோதியதில் ஓட்டுநர் மரணம்

கோல சிலாங்கூர், மார்ச் 27 :

இன்று, ஜாலான் ஹாஜி முஹமட் 2, புக்கிட் பெலிம்பிங் என்ற இடத்தில், தான் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி மரத்தில் மோதியதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.

கோல சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ராம்லி காசா கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு காலை 10.19 மணிக்கு தகவல் கிடைத்தது.

“ஜாலான் ஹாஜி முஹமட் 2 இலிருந்து ஜாலான் புக்கிட் பெலிம்பிங் நோக்கி, தோயோத்தா கொரோலா வகை காரை ஓட்டிச் சென்ற 47 வயதான பாதிக்கப்பட்டவர், ஒட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்திலிருந்த மரத்தில் மோதியது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

“விபத்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று இன்று தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

இந்த வழக்கு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987ன் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here