தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், முனிசாமி மற்றும் மனைவி அன்னபூரணி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்

ரெம்பாவ், மார்ச் 28 :

ஜாலான் பெடாஸ் குண்டூர்-லிங்கி செல்லும் பாதையின் 5.6 ஆவது கிலோமீட்டரில், இன்று காலை நடந்த விபத்தில் ஒரு தம்பதியினர் சென்ற மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில், காலை 8 மணியளவில், தலையில் பலத்த காயம் அடைந்த பீடாஸ் தாமான் கோப்பரேசியைச் சேர்ந்த, ஏ.முனிசாமி, 70, மற்றும் அவரது மனைவி, எல். அன்னபூரணி, 65, ஆகியோரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர், ஹஸ்ரி முகமட் கூறுகையில், விபத்துக்குள்ளானவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளும், 36 வயதுப் பெண் ஓட்டிச் சென்ற கியா ரியோ காரும் விபத்துக்குள்ளானது.

“முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் பெடாஸில் இருந்து குண்டூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்தபோது, ​​எதிரே வந்த கியா ரியோ கார் மீது மோதியது.

“விபத்தின் விளைவாக, தம்பதியினர் தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் உடல் ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றும் ஹஸ்ரி கூறினார்.

மேலும், இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here