சபாவின் ஜாலான் மாசாக்கிலுள்ள நான்கு வீடுகள் தீயில் எரிந்து நாசம்!

கெனிங்கா, மார்ச் 29 :

நேற்று இரவு 7.45 மணியளவில், இங்குள்ள ஜாலான் மாசாக், கம்போங் மோட்டோவிலுள்ள நான்கு வீடுகளில் தீப்பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வசிப்பவர்கள் பீதியடைந்தனர்.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், சம்பவம் தொடர்பில் தங்களுக்கு இரவு 8 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து 16 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீ நான்கு வீடுகளில் பெரும்பாலானவற்றை அழித்துவிட்டது, மேலும் அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்க, உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையினால், தீ அருகில் உள்ள மற்ற 13 வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில், உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றும் இரவு 9 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“நள்ளிரவு 1.47 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிவதற்குள், வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்த தீயணைப்புப் பிரிவினர் ஆய்வுகளைச் செய்தனர்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here