சிரம்பானில், ஜாலான் லாமா புக்கிட் புட்டாஸ் சிரம்பான் -குவாலா பிலாவில் உள்ள 14ஆவது கி.மீட்டரின் பள்ளத்தாக்கில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் உதவ இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மீதான விளக்கமறியல் உத்தரவு மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
41 மற்றும் 44 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுடைய பெண் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 23 முதல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து நாளை முதல் ஏப்ரல் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் ஏசிபி நந்தா மரோஃப் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தாமான் புக்கிட் ஜம்ருதில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே உள்ள புதரில் நேற்று தொடங்கிய தேடுதல் வேட்டை இன்று காலை 9.30 மணிக்கு 200 மீட்டர் சுற்றளவில் மூன்று கண்காணிப்பு நாய்களை கொண்டு மீண்டும் தொடங்கியது. இதுவரை புதிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.