சுங்கை பட்டாணி, ஏப்ரல் 2 :
கோல மூடா மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி வரை வீசிய புயலில் மொத்தம் 148 வீடுகள் மற்றும் வளாகங்கள் சேதமடைந்தன.
நேற்று நண்பகல் 2 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சுங்கைப் பட்டாணி மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டத்தில் உள்ள ஐந்து வீட்டுப் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகள் மற்றும் ஒரு பொது மண்டபம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
கோல மூடா மாவட்ட குடிமைப் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (PA) அசஹார் அஹ்மட் கூறுகையில், 81 வீடுகளை உள்ளடக்கிய தாமான் ஸ்ரீ இம்பியான், தாமான் சுதேரா ஜெயா (27), தாமான் சாங்கெட் (30), தாமான் சோங்கெட் இந்தா (4) மற்றும் தாமான் சாரி (2) ஆகிய ஐந்து வீட்டுப் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
“அது தவிர, மூன்று வீடுகளை உள்ளடக்கிய கம்போங் மண்டி லெம்பு மற்றும் தாமான் ஸ்ரீ இம்பியன் பொது மண்டபமும் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதில் இந்தச் சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் “குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) உறுப்பினர்கள் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.









