நண்பகல் நிலவரப்படி அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராகவுள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 3 :

ரமலான் மாதம் தொடங்கியதால், நாட்டின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நிலைமை இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி சீராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தலைநகர் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் வழிகளில் போக்குவரத்து சீராக இருந்தது, பெர்மாடாங் பாவிலிருந்து சுங்கை துவா டோல் பிளாசா வரை, KM130 இல் விபத்து காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.

இன்று மாலைக்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் நிறைய பேர் தங்கள் சொந்த ஊர்களில் ரமலானின் முதல் நாளைக் கொண்டாடி விட்டு, வார இறுதி நாட்களைப் பயன்படுத்தி தலைநகருக்குத் திரும்புவார்கள்,” என்று அவர் கூறினார்.

LLM இன் கட்டணமில்லா லைன் 1800-88-7752 மற்றும் www.twitter.com/llminfotrafik என்ற ட்விட்டர் தளம் அல்லது ப்ளஸ்லைன் 1800-88-0000 மற்றும் Twitter தளம் www.twitter com/plustrafik மூலம் பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்துத் தகவலைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here