முகக்கவசம் மட்டும் அணிந்து நிர்வாணமாக சுற்றி திரிந்த ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலமில்  நேற்று, செக்‌ஷன் 20இல், நிர்வாண நிலையில் வீட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் 010-8889910 அல்லது 03-55202222 என்ற எண்ணில் உதவிப் புலனாய்வு அதிகாரி சார்ஜென்ட் முகமது ஷஃபருல்ராசியைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டம் 457ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். முகமட் இக்பால் கூறுகையில், அந்த நபர் அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து சிறிது பணத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டின் உரிமையாளரான 49 வயதுப் பெண் மற்றும் அவரது 18 வயது மகளும் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கண் கூசுவதைக் கண்டு விழித்தபோது, ​​தங்கள் வீட்டில் ஊடுருவும் நபர் இருப்பதை உணர்ந்ததாக அவர் கூறினார்.

ஊடுருவும் நபரின் இருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அலறியதுடன், நிர்வாணமாக முகக்கவசம் மட்டும் அணிந்திருந்த ஊடுருவிய நபர் தப்பியோடியதாம மேலும் அவர் கூறினார்.

செக்‌ஷன் 20 இல் வீடு உடைக்கப்படுவதற்கு முன்பு,  செக்‌ஷன் 19 இல் உள்ள வீட்டுப் பகுதியில் நிர்வாண மனிதர் ஒருவர் முகக்கவசம் அணிந்து அலைந்து திரிந்த வீடியோ வைரலானதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here