புத்ராஜெயா: மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள் அல்லது “basikal lajak” வழக்கில் அவரது தண்டனை மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான அவரது விண்னப்பம் நிலுவையில் உள்ள நிலையில், சாம் கே டிங்கை ஒரு நபர் உத்தரவாதத்தில் RM10,000 ஜாமீனில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அரசுத் தரப்புக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று துணை அரசு வழக்கறிஞர் மனோஜ் குருப் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நீதிபதி ரவீந்திரன் பரமகுரு இன்று அவரது ஜாமீன் மனுவை அனுமதித்தார்.
கடந்த வாரம், ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு ஜோகூர் பாருவில் மாற்றியமைக்கப்பட்ட மிதிவண்டிகளை ஓட்டிச் சென்ற எட்டு இளைஞர்களின் உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக சாமுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM6,000 அபராதமும் விதித்தது.