Keluarga Malaysia (மலேசிய குடும்பம்) தொழிலாளர்களின் பங்களிப்பை அரசாங்கம் எப்போதும் பாராட்டுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
இந்த ஆண்டு தொழிலாளர் தினத்திற்கான கருப்பொருள், தேசிய மீட்சியில் மலேசிய குடும்ப தூண் தொழிலாளர்கள் (Pekerja Tonggak Keluarga Malaysia Dalam Pemulihan Negara’)
நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படும் Keluarga Malaysiaவின் ஒற்றுமை, உடன்பாடு மற்றும் ஒத்துழைப்பின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது என்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து உத்தி ரீதியான பங்காளிகளாக இருந்து மீண்டு வரும் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.