ஒரு வாரமாகியும், குழந்தையை யாரும் உரிமைகோரவில்லை என்கிறது போலீஸ்

கோம்பாக், மே 18 :

மே 11 ஆம் தேதியன்று செலாயாங் காவல் நிலையத்தில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட குழந்தை தொடர்பில், அவரது உறவினர்களோ அல்லது குடும்பத்தினரோ இதுவரை குழந்தையை உரிமை கோர முன்வரவில்லை .

கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமட் கூறுகையில், குழந்தை தற்போது சமூக நலத்துறையிடம் (ஜேகேஎம்) மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

இக்குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here