கோம்பாக், மே 18 :
மே 11 ஆம் தேதியன்று செலாயாங் காவல் நிலையத்தில் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட குழந்தை தொடர்பில், அவரது உறவினர்களோ அல்லது குடும்பத்தினரோ இதுவரை குழந்தையை உரிமை கோர முன்வரவில்லை .
கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமட் கூறுகையில், குழந்தை தற்போது சமூக நலத்துறையிடம் (ஜேகேஎம்) மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இக்குழந்தை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.