கடற்கரையில் குளித்தபோது கணவன், மனைவி நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது!

சுக்காய், மே 20 :

இன்று காலை, பந்தாய் பெனுன்ஜூங் கிஜால் கெமாமானில் திருமணமான ஒரு தம்பதியினர் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

பலியானவர், அஹ்மட் கரீப் அப்துல் காதிர், 60, மற்றும் அவரது மனைவி, ரோகியா அப்துல் ரஹ்மான், 59, ஆகியோரே அதிகாலை 4 மணியளவில் குளித்துக் கொண்டிருந்த போது, ​​நீரில் மூழ்கி, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

பகாங்கின் தெமெர்லோவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் நான்கு பிள்ளைகளுடன் கடற்கரைக்கு விடுமுறைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தங்கும் இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையிலேயே அவர்கள் குளித்ததாக கூறப்படுகிறது.

அதிகாலை 5 மணியளவில், கடற்கரைக்குச் சென்ற பாதிக்கப்பட்டவரின் மகன், அவர்களது பெற்றோர் இருவரும் கடற்கரையில் இல்லாததைக் கண்டு, அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.

கிஜால் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் அட்ரி மாட் ஹருன் இதுபற்றிக் கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்கு முன்பு, அதிகாலை 5.43 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கூறினார்.

அவர் கூறுகையில், தனது பெற்றோர் இருவரையும் காணவில்லை என்பதை உணர்ந்த பாதிக்கப்பட்டவரின் மகன் கடற்கரை பகுதியில் தேட முயன்றும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

“பாதிக்கப்பட்ட இருவரையும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் மொத்தம் 61 தீயணைப்பு வீரர்கள், காவல்துறை, மலேசிய தன்னார்வத் துறை (ரேலா) மற்றும் கிராம மக்கள் உடனடியாக அணிதிரண்டனர்.

தீயணைப்புப் படகுகள், காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்களைப் பயன்படுத்தி 500 சதுர மீட்டர் சுற்றளவில் தேடுதல் நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இதுவரை பாதிக்கப்பட்ட இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here