குனுங் சுகு மலை ஏறி மரணமடைந்த இரண்டு பெண்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன

ஈப்போவில் மே 15 ஆம் தேதி  சிம்பாங் பூலாயில் உள்ள குனுங் சுக்கு மலை ஏறும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பெண் ஏறுபவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மே 16 அன்று கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் 32 வயதான சீ சூ யென் என்பவருடையது என்றும், கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது உடல் இங் யீ செவ் (46) என்பவருடையது என்றும் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

அவர் கூறுகையில், பலியான இருவரின் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண, பிரேத பரிசோதனை செயல்முறை இங்குள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட இருவரின் அடையாளங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று காலை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் (பிரேத பரிசோதனை) வெளிவந்த பிறகு, சமீபத்திய தகவலைப் பகிர்ந்து கொள்வோம்.

2022 ஆம் ஆண்டு 215ஆவது போலீஸ் தினத்துடன் இணைந்து இன்று விமானப்படையின் பயிற்சித் தள பல்நோக்கு மண்டபத்தில் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இரண்டு மலை ஏறுபவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரால் உரிமை கோரப்படவில்லை” என்று கூறினார்.

மே 16 அன்று, தேடல் மற்றும் மீட்பு (SAR) குழு இரண்டு பெண் ஏறுபவர்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் மனித உறுப்புகளின் பாகங்கள் மற்றும் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.செராஸ், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் கிள்ளான் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரு பெண்களும் மே 15 அன்று அதிகாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here