சண்டகன் தெருவில் தகராறு செய்த 21 மாணவர்கள் கைது

சண்டகனில் மூன்று வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவர்களையும் ஒரு முன்னாள் மாணவனையும் சண்டகன் போலீசார் கைது செய்தனர்.

இந்த சண்டையின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சண்டகன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ஃபுவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் 14 மற்றும் 18 வயதுடையவர்கள். எங்கள் ஆரம்ப விசாரணைகள், சண்டை தவறான புரிதலால் உருவானது என்பதைக் காட்டுகிறது. மேல் நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் முன் நாங்கள் எங்கள் விசாரணைகளை முடிப்போம் என்று அவர்  ஒரு அறிக்கையில் கூறினார்.

21 வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பில், இ ஜாலான் எலோபுராவில் பள்ளி சீருடையில் ஆண் மாணவர்கள் குழு ஒன்று சண்டையிடுவதைக் காண முடிந்தது. இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here