கோலாலம்பூர், ஜூன் 8 :
இன்று ஜாலான் ஈப்போ-கோல கங்சார், 33 ஆவது கிலோமீட்டரில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில், சுங்கை சிப்புட் மருத்துவமனையின் துணை மருத்துவ அதிகாரி மரணமடைந்தார்.
பெரோடுவா ஆக்சியா காரை ஓட்டி வந்த நோரேஸ்லி ஜகரியா, 38 என்பவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவர் மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் கைசாம் அஹ்மட் ஷஹாபுடின் கூறுகையில், இரண்டு பெரோடுவா ஆக்சியா கார்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான தகவல் காலை 7.50 மணியளவில் கிடைத்ததாக கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் சறுக்கியதால், விபத்து ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
“கோல கங்சாரில் இருந்து ஈப்போவுக்குச் சென்று கொண்டிருந்த 40 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா ஆக்சியா கார், பாதிக்கப்பட்டவரின் கார் மீது மோதியது.
“இதனால் பலத்த காயமடைந்த துணை மருத்துவ அதிகாரி சம்பவ இடத்திலேயே இறந்தார், அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் வலது கால் முறிந்தது மற்றும் அவர் மேலதிக சிகிச்சைக்காக சுங்கை சிப்புட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்டபோது கூறினார்.
இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் படி, விசாரணை நடத்தப்பட்டது.